தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை

0 1

சென்னை: தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடக்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உத்தரவு. நட்சத்திர அரசியல் தலைவர்களின் பரப்புரை, மக்கள் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே திட்டமிட டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். சுவிதா இணையதளம் மூலம் அனுமதி கேட்பவர்களுக்கு உரிய நேரத்தில் அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கைதிகளில் எத்தனை பேர் வாக்களிக்க தயாராக உள்ளனர் என்பது தொடர்பாக விவரங்களை சேகரிக்க உத்தரவு அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.