செல்போன் பயன்பாட்டால் பதிவுத் தபால் சேவை செப்டம்பர் 1-ந் தேதி முதல் முடிவுக்கு வருகிறது.

0 3

இந்தியாவில் தபால் சேவை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1856-ம் ஆண்டு தொடங்கியது. அந்த நேரத்தில், தபால் பெட்டிகளும் மக்கள் கண்களில் படும்படி ஊருக்கு ஒன்று நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் மரப்பெட்டியாகவும், பிறகு இரும்புப் பெட்டியாகவும் அவை உருமாறின. இந்தியாவில் போஸ்ட் கார்டு 1879-ம் ஆண்டும், பதிவு தபால் சேவை 1898-ம் ஆண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. இடையில் இன்லேண்ட் லெட்டர் வருகையும் வந்தது. ஆனால், எலக்ட்ரானிக் உலகில் புரட்சி வரவான செல்போன், நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட இவை அனைத்தையும் அழிக்கத் தொடங்கிவிட்டன அந்த வரிசையில் அஞ்சல் அட்டை, இன்லேண்ட் லெட்டரை தொடர்ந்து 128 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த பதிவுத் தபால் சேவையும் இப்போது முடிவுக்கு வருகிறது. அதாவது, பதிவுத் தபாலுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாத காரணத்தால், வரும் செப்டம்பர் 1-ந் தேதியுடன் விரைவு தபால் (ஸ்பீடு போஸ்ட்) சேவையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது இதுவரை பதிவுத் தபால்கள் மூலம் அரசு கடிதம்,அரசு ஆணை, நீதிமன்ற ஆணை, வங்கி கடிதம், பாஸ்போர்ட் ஆகியவை அனுப்பப்பட்டு வந்தன. அதற்கு கட்டணமாக ரூ.26 வசூலிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பதிவுத் தபாலை எங்கு வேண்டுமானாலும் இதே கட்டணத்தில் அனுப்ப முடியும். தபாலின் எடை கூடினால் மட்டுமே இந்தக் கட்டணம் மாறும். அதே நேரத்தில், பதிவுத் தபாலை, அதில் குறிப்பிட்டுள்ள நபர் மட்டுமே கையெழுத்து போட்டு வாங்க முடியும். ஆனால், விரைவுத் தபால் அனுப்ப கட்டணம் ரூ.41 ஆகும் தூரத்திற்கு ஏற்பவும், தபாலின் எடைக்கு ஏற்பவும் கட்டணம் மாறுபடும். அதே நேரத்தில், விரைவுத் தபாலை அதில் குறிப்பிட்ட நபர் அல்லாமல், மற்றவர்களும் கையெழுத்து போட்டு வாங்கலாம் இதனால், பதிவுத் தபால் சேவையை நிறுத்தும் அஞ்சல் துறையின் முடிவுக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

 

Leave A Reply

Your email address will not be published.