திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்மாவட்ட ஆட்சித்தலைவர்ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் 526 குடியிருப்பு கட்டிடங்களின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு மின் பகிர்மான கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் முன்னிலையில் இன்று (30.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சேஷத்ரிமயும் தீபி சானு, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கங்காதாரிணி, மண்டல தனித்துணை ஆட்சியர் (இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம்) திருமதி கா.நஜிமுன்னிசா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


