முனைவர் ஆன அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!(Dr.Anbil Mahesh Poyyamozhi!)

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021ஆம் ஆண்டு முதல் உடற்கல்வி இயந்திரக் கற்றல் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு திறன்மிகு கற்றில் (Physical Activity for Skill Development Through Machine Learning) என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தார். இதன் ஒரு பகுதியாக நவம்பர் 17ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் அவருக்கு முனைவர் VOCE பட்ட வாய்மொழித் தேர்வு(VIVA Examination) நடைபெற்றது இறுதியில் External Examiner Dr.S. Thirumalai Kumar(Tamilnadu physical education and Sports University) அவர்கள் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி’ என அறிவித்தார்.

திருச்சி தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் உடற்கல்வியியல் துறை இயக்குநர் முனைவர் திரு து.பிரசன்ன பாலாஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
உடற்கல்வி செயல்பாடுகள் முழுமையான வளர்ச்சிக்கு பள்ளிக் குழந்தைகளின் எவ்வாறு உதவுகின்றன? கணினிசார் நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கற்றலுக்கு எவ்வாறு உதவுகிறது? என்பதை இந்த ஆய்வு பகுப்பாய்வு செய்தது. மேலும் உடற்கல்வி செயல்பாடுகள் குழந்தைகளின்

