திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை முன்னிட்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை !

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள “பசும்பொன் முத்துராமலிங்க தேவர்” அவர்களின் திருவுருவச் சிலைக்குமாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்வில் முன்னிலை மாநகரக் கழகச் செயலாளர்மு மதிவாணன். மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டோர் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் மாவட்ட கழக நிர்வாகிகள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்செல்லையா, நூற்ஹான், சரோஜினி,
மாநில – மாவட்ட – மாநகர நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

