திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
திருப்பூரில் வெட்டி கொல்லப்பட்ட சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக் குறிப்பில், திருப்பூர் மாவட்டம். குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11 மணியளவில் ரோந்துப் பணிக்குச் சென்றுள்ளனர் .
அப்போது, சிக்கனூத்து அருகில் தனியாரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சினை குறித்து தகவல் அறிந்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்கு சென்றனர் அங்கே, அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சண்முகவேலை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.

