திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது. ஆணையர் லி. மதுபாலன் அவர்கள் தகவல்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து தீர்வு காணும் வகையில் முகாம்கள் நடைபெறுகிறது . இம்முகாம்களில் வாயிலாக நகர்ப்புறத்திற்கு 13 துறைகள் மூலமாக 43 சேவைகள் வழங்கும் வகையில் இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது.
மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்கள் 19.08.2025ம் தேதி மண்டலம் 4, வார்டு எண் 53க்கு யானை கட்டி மைதானம் அருகில் உள்ள பி. எஸ். எஸ். திருமண மண்டபத்திலும்,
மண்டலம் 5 வார்டு எண்.27 மற்றும் 28க்கு உழவர் சந்தை மைதானத்திலும்
21.08.2025ம் தேதி மண்டலம் எண் 1, வார்டு எண் 4க்கு திருவானைக் கோவில் ஶ்ரீமத் ஆண்டவர் கலைக்கல்லூரியிலும்
21.08.2025ம் தேதி மண்டலம்2, வார்டு எண் 20க்கு மரக்கடை குடிநீர் மேல்நிலை நீர்தேகக்க தொட்டி வளாகத்திலும்
22.08.2025ம் தேதி மண்டலம் எண் 3, வார்டு எண் 38 மற்றும் 43 ஆகிய வார்டுகளுக்கு மட்டும் பிரகாஷ் மஹால் அரியமங்கலத்திலும் அறிவிக்கப்பட்ட வார்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மட்டும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற உள்ளது. மற்ற வார்டுகளுக்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மேலும் , மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் இம்முகாமினை பயன்படுத்தி தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வு காணலாம்.

