தமிழ்நாடு துனை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னீட்டு திருச்சி மாநகரம் சார்பாக சிறப்பு பட்டிமன்றம்.

திருச்சி
நாள் : 28.12.2025 ஞாயிற்றுக்கிழமை
DOM48
தமிழ்நாடு துனை முதலமச்சர் உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்தநாளை முன்னீட்டு திருச்சி மாநகரம் சார்பாக
சிறப்பு பட்டிமன்றம் காட்டூர்.இந்தியன் பேங்க் அருகில் உள்ள
டர்ப் மைதானத்தில் நடைபெற்றது.
தலைமை
மு.மதிவாணன்.
முன்னிலை
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
பட்டிமன்றத்தை துவக்கி வைத்து சிறப்புரை
மாநில தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
கு.செல்வப்பெருந்தகை.
தலைப்பு
இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலினின் வெற்றிக்குப் பெறும் துணை நிற்பது
கட்சிப் பணியே
அரசுப்பணியே என்ற தலைப்புகளில் . நடைபெற்றது
பட்டிமன்ற நடுவர் கழக கொள்கை பறப்புச் செயலாளர் திண்டுக்கல் .லியோனி.
இரு அணியிலும் உரையாற்றுபவர்கள்
கவிஞர் இனியவன்
கடலூர் தணிகைவேலன்
பேரா.விஜயக்குமார்
திருமதி.நாகநந்தினி
இந்நிகழ்வில்
மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா
சட்டமன்ற உறுப்பினர்கள் S.இனிகோ இருதயராஜ்
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் K.N.சேகரன்
P.M.சபியுல்ல மாநில அணி நிர்வாகி ா N.செந்தில்
பகுதி கழகச் செயலாளர் நிலமேகம். மாநகர கழக நிர்வாகிகள் B.A.நூர்கான் M.தமிழ்செல்வம் சந்திரமோகன் பொன் செல்லையா சரோஜினி மற்றும் மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி நகர பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்த சிறப்பு பட்டிமன்றத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உரையாற்றியதாவது நடைபெற்று கொண்டிருக்கக் கூடிய தமிழக துணை முதல்வரின் 48 வது பிறந்தநாள் நிகழ்ச்சியாக இந்த சிறப்பு பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகவும் திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் 48 நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டு நிறைவு நிகழ்வாக இந்த சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்று வருவதாகவும் இந்த சிறப்பு பட்டிமன்றத்திற்கு வருகை புரிந்திருக்க கடிய தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் எனது அண்ணன் செல்வப் பெருந்தகை
அவர்களை நான் வரவேற்பதாகவும் அவர் செல்வத்தில் பெருந்தையாக இருக்கிறாரா என்பது எனக்கு தெரியவில்லை ஆனால் மனதிலும் குணத்திலும் பெருந்தையாக திகழ்ந்து வருகிறார் என்றும் 120 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் ஒருவர் நமது துணை முதல்வர் வாழ்த்துகிறார் என்றால் அது நமக்கான பெருமையாக நான் கருதுவதாகவும் எடுத்துரைத்தார் மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் நாம் ஆட்சிக்கு வந்த பொழுது இக்கட்டான சூழ்நிலையில் இருந்த தமிழகத்தை தற்பொழுது தனது ஆட்சி நிர்வாக திறமையால் இரட்டை இலக்க பொருளாதாரத்தை உயர்த்தி உள்ளார் தமிழக முதல்வர் .
ஆனால் நமது தமிழக முதல்வர் அவர்களின் சிறப்பான ஆட்சித் திறமையால் கல்வியில் இந்த மூன்று ஆண்டுகளில் கல்வியில் சிறந்தது தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்துள்ளதாகவும் எனவே இதற்கு முதல்வரின் கரங்களை வலுப்படுத்த கூடியவராக இருக்கக்கூடிய துணை முதல்வர்கள் பிறந்த நாளை தான் இன்று நாம் கொண்டாடி வருகிறோம் என்றும் மேலும் தமிழகத்தின் முத்தான திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 202425-ல் எந்த ஆண்டும் இல்லாதவரை தற்பொழுது 57 பேர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வில் தேர்வாகியுள்ளதாகவும் இதை பார்த்து தான் ஒன்றிய அரசு நம்மை பார்த்து வாழ்த்துவது மட்டுமல்லாமல், பயப்படுவதாகவும், எடுத்துரைத்தார் மேலும் தேர்தலுக்கு இன்னும் 60 நாட்களில் தான் உள்ளதாகவும் எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக முதல்வர் அரியணையில் ஏற்றுவதற்கு அயராது பாடுபட வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் கடந்த 2021 இல் இருந்து தற்போது வரை இந்த 55 மாதங்களில் நமது திருவரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை , காட்டூர் திருவெறும்பூர் அரியமங்கலம் பாலக்கரை பகுதிகள் மற்றும் திருவரம்பூர் வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியம் துவாக்குடி நகராட்சி கூத்தபபர் பேரூராட்சி என 383 12 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து உள்ளதாகவும் மேலும் இதை சுருக்கமாக கூறினால் மாதத்திற்கு 7 கோடி ரூபாய் பணிகள் ஒவ்வொரு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.

பட்டி மன்ற நிகழ்வில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஆற்றிய உரை
தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை ஒருபோதும் யாராலும் பிரிக்க முடியாது. இது சீட்டுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. கொள்கையால் உருவாக்கப்பட்ட கூட்டணி. எண்ணிக்கைக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; எக்கு போல உறுதியான கூட்டணி. இந்தியாவில் மற்ற மாநிலங்களில் எல்லாம் மதவாதிகள் அத்துமீறி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் தமிழ்நாட்டில் எந்த பிரச்சனையையும் உருவாக்க முடியவில்லை. அதற்கு காரணம், இங்கு அசைத்துப் பார்க்க முடியாத அளவிற்கான தலைவராக நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இருக்கிறார்.
திருச்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எப்படி 3 தலைமுறையை கடந்த உறவு இருக்கிறதோ, அதேபோல தான் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் மூன்று தலைமுறைகளை கடந்த உறவு இருக்கிறது.
அதன் வெளிப்பாடுதான் கோவையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், “நான் என் வாழ்நாளில் யாரையும் அண்ணா என்று அழைத்து அல்ல; ஸ்டாலின் அவர்களே உங்களை அண்ணா என்று அழைக்கிறேன்” என்று பாசத்தோடு சொன்னது.
எங்கள் கூட்டணியை எந்த சூழ்ச்சி செய்தும் வீழ்த்த முடியாது. இது எக்கு போல உறுதியான கூட்டணி. எண்ணிக்கைக்கான கூட்டணி அல்ல.
தமிழ்நாடு அதிகம் கடன் வாங்குவதாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.
சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும் மாநிலத்திற்கு தான் கடன் கொடுப்பார்கள். மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கும் அரசாங்கம் இருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு எப்படி அந்த சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும். அவர்களை எந்த வங்கியும் கிட்டக்கூட சேர்க்காது.ஆனால் அனைத்து வகையில் நல்ல வளர்ச்சியை கொண்டு இருக்கும் தமிழ்நாட்டுக்கு தைரியமாக கடன் வழங்க உலக வங்கிகள் தயாராக இருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் கல்லாப்பட்டி ஆட்சி ஒன்று தமிழ்நாட்டில் இருந்தது. அப்போது தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய எந்த நிறுவனமும் முன்வரவில்லை. ஆனால் நம்முடைய முதலமைச்சர் ஆட்சிக்கு வந்தபின்னர், இப்படி ஒரு முதலமைச்சரை நாங்கள் இந்தியாவில் எங்குமே பார்த்ததே இல்லை என்று சொல்லி வியப்போடு தமிழ்நாட்டில் முதலீடு செய்கிறார்கள். அதிகமான தொழில் முதலீடுகளை பெரும் ஶ்ரீபெரும்புதூர் தொகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இதனை நான் பதிவு செய்கிறேன்.
ஒரு கூட்டத்தில் பேசியபோது எனக்கு மூச்சி வாங்கியது. என்ன காரணம் என்று கேட்டார்கள், வேறு எந்த காரணமும் அல்ல, சொல்லத் தொடங்கினால் மூச்சு வாங்கும் அளவுக்கு எண்ணற்ற திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தி இருக்கிறார். ஆனால் கடந்த காலத்தில் இருந்த கல்லாப்பட்டி ஆட்சியில் இப்படி பெருமையோடு சொல்லும் அளவுக்கு எந்த திட்டமும் இல்லை. அதற்கு பதிலாக ஊழல் தான் நிறைந்து இருந்தது.
நான் உறுதியான சொல்கிறேன், மீண்டும் தமிழ்நாட்டில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சி தான் தமிழ்நாட்டில் அமையும் என்பதை உறுதியாக சொல்கிறேன்..

