தோழர் அச்சுதானந்தன் படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை‌ .

0 21

சுதந்திரப் போராட்ட வீரரும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபன தலைவர்களில் ஒருவரும்,
முதுபெரும் தோழரும், கேரளா முன்னாள் முதல்வருமான தோழர்
வி.எஸ். அச்சுதானந்தன் உடல் நலக்குறைவால் கடந்த ஞாயிறு அன்று காலமானார்.
இதையொட்டி
திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட அலுவலகம் வெண்மணி இல்லத்தில் கேரள மாநில முன்னாள் முதல்வர்
பி எஸ் அச்சுதானந்தன் அவரின் திரு உருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மலர் துவி மரியாதை செலுத்தினார்‌ இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர்
மு. மதிவாணன் மற்றும்
CPI(M) மாநில கட்பாட்டு குழு தலைவர் S. ஸ்ரீதர்
கோவி. வெற்றிச்செல்வம் மாநகர் மாவட்ட செயலாளர் மாவட்ட குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் சுரேஷ் – பாரதி சீனிவாசன் திமுக மலைக்கோட்டை போதிக் கழகச் செயலாளர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.