அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து,ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவாக்குடி நகராட்சி, அய்யம்பட்டி சாலையில் இன்று (06.08.2025) நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தொடங்கி வைத்து, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


