விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 68 வது நினைவு நாள்

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் பொன் முருகேசன் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமத் மற்றும் கழக நிர்வாகிகள் அகில இந்திய மறுமலர்ச்சி கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர் .

