இங்கிலாந்தை வீழ்த்தி 4வது முறையாக பைனலுக்கு தகுதி; எனது இதயம் நிமிடத்திற்கு 160-175 முறை துடித்திருக்கும்: வெற்றிக்கு பின் கேப்டன் சூர்யகுமார் பேட்டி

0 1

மும்பை: 10வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 2வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன் குவித்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 42 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 89, சிவம் துபே 43, இஷான் கிஷன் 39 , ஹர்திக் பாண்டியா 27, திலக்வர்மா 21ரன் அடித்தனர்.

இந்திய செய்திகள்

பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் 48 பந்தில் 8 பவுண்டரி,7 சிக்சருடன் 105, வில்ஜாக் 35 ரன் அடித்தனர். 20 ஓவரில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்களே எடுத்தது. இதனால் 7 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றிபெற்றது. இந்திய பவுலிங்கில் பாண்டியா 2, பும்ரா, அக்சர், வருண், அர்தீப்சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் இந்தியா 4வது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளது.

வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் கூறியதாவது: பைனலுக்கு தகுதி பெற்றிருப்பது நம்ப முடியாத விஷயம்;. சொந்த மண்ணில் பைனலுக்கு அழைத்துச் செல்வது உண்மையிலேயே மகிழ்ச்சி. சாம்சனுக்கு பாராட்டுக்கள். இப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை தான் தொடக்க வீரர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு போட்டியை தங்கள் பக்கம் இழுத்து வெற்றி பெற்றிருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு பும்ராவின் சிறப்பான பந்துவீச்சும் ஒரு காரணம். வீரர்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். அதற்கு பயிற்சியாளர் திலீப்புக்கு தான் பாராட்டுதெரிவிக்க வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.