“முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” கே.என்.நேரு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.08.2025) “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி, உறையூர் நாச்சியார் கோவில் தெருவில் நடைபெற்ற விழா நிகழ்வில் மாண்புமிகு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேசன் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்கி பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாண்புமிகு மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், பொது வினியோக திட்ட துணைப்பதிவாளர் மாரிச்சாமி, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்க பணியாளர்கள், மண்டலத்தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

