டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை எப்படி சேர்ப்பது என்பது குறித்து ஆலோசனை

0 4

சென்னை: டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது டிடிவி.தினகரன், ஓபிஎஸ்சை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.

தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜ, பாமக (அன்புமணி) ஆகிய கட்சிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. கூட்டணியில் உள்ள பாஜ மற்றும் பாமகவுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அந்தந்த கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது. கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜ 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஆனால், இந்த முறை 50 தொகுதிகள் கேட்பது மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பாஜ பங்கு கேட்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போது எடப்பாடியிடம் இந்த விசயத்தை கூறினார். இதை கேட்டு எடப்பாடி அதிர்ந்து போனார். அது மட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கு என்பதை ஏற்கவே முடியாது. இது தொடர்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசித்து அதன் பின்னர் அறிவிப்பதாக கூறிவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.