ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் கைது – இலங்கை கடற்படை நடவடிக்கை!

0 3

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கூறி அவ்வப்போது கைது செய்து அவர்களது படகுகளையும் சிறை பிடித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் சென்ற மூன்று மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிதாக கூறி கைது செய்து இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த மீனவர்கள் தமிழகத்தின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து மீன்வளத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக அந்த மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.